போதைப் பொருளுக்காக துர்நடத்தையில் ஈடுபட்ட சிறுமி 8 மாத கர்ப்பம்! யாழ்.கோப்பாய் பகுதியில் நடந்த பயங்கர சம்பவம்..

ஆசிரியர் - Editor I
போதைப் பொருளுக்காக துர்நடத்தையில் ஈடுபட்ட சிறுமி 8 மாத கர்ப்பம்! யாழ்.கோப்பாய் பகுதியில் நடந்த பயங்கர சம்பவம்..

போதைக்கு அடிமையான சிறுமி ஒருவர் 8 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் மீட்கப்பட்டார்.

இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை குறித்த சிறுமி போதைப்பொருளினை பெற்றுக்கொள்வதற்காக பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபட்டமையினால் தான் கர்ப்பம் தரித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு