சில தரப்புக்களை பயன்படுத்தி தியாகி திலீபனின் நினைவேந்தலை குழப்ப அரசு தீவிர முயற்சி! ஆனாலும் எழுச்சியுடன் நடக்கும் - முதல்வர் மணிவண்ணன்..

ஆசிரியர் - Editor I
சில தரப்புக்களை பயன்படுத்தி தியாகி திலீபனின் நினைவேந்தலை குழப்ப அரசு தீவிர முயற்சி! ஆனாலும் எழுச்சியுடன் நடக்கும் - முதல்வர் மணிவண்ணன்..

தியாகி திலீபனின நினைவேந்தல் இவ்வாண்டு எழுச்சியுடன் நடைபெறும் என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களை விட இம்முறை நிலைமை சற்று சீராகக் காணப்படுவதால், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக நினைவுகூருவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அவர் இனத்தின் அடையாளம் என்ற படியால், அவர் மக்களுக்கு சொந்தமானவர். ஆகவே நினைவேந்தல் நிகழ்வுகளை கட்சி மற்றும் அமைப்புகள் சாராமல், 

பொதுவாக உருவாக்கப்பட்டுள்ள குழுவே இம்முறை மேற்கோள்ளும்.நினைவேந்தல் இடம் மாநகர சபை எல்லைக்குள் இருக்கிறது. 

ஆகவே அதற்கான வழிமுறைகளை மாநகர சபை என்ற ரீதியில் கூறுவது சரியாக இருக்கும் என்று நம்புகின்றேன். 

நினைவு தினமன்று கவி அரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளை நடத்துவதற்கு நினைவேந்தல் குழு தீர்மானித்துள்ளது. 

அதற்கு அமைவாக நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது தவிர சில தரப்புக்கள் நினைவேந்தல்களை மேற்கொள்ள விட மாட்டார்கள். குழப்புவார்கள். 

ஆகவே இம்முறையும் குழப்பம் வரலாம். அதற்கான வேலைகளை அரசு தரப்பு மேற்கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் உள்ள அரசு வேறு ஒரு வழியை கையாண்டது. இம்முறை உள்ள அரசு குழப்புவதற்காக கும்பல்களை ஏவிவிடும் வாய்ப்புகள் உள்ளது. 

ஆகவே இவற்றை எல்லாம் கடந்து எழுச்சியாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளுவோம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு