புகைரத கடவைக்குள் நுழைந்த கார் மீது மோதிய புகைரதம்! பெண் ஒருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
புகைரத கடவைக்குள் நுழைந்த கார் மீது மோதிய புகைரதம்! பெண் ஒருவர் படுகாயம்..

புகைரத கடவைக்குள் நுழைந்த கார் மீது புகைரதம் மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் இன்று அதிகாலை நுகேகொட - பெங்கிரிவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

புகையிரத நிலையத்திற்கு அருகில் வசிக்கும் தம்பதியினர் இன்று (21) அதிகாலை திம்புலாகல பகுதிக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியபோதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

அவிஸ்ஸாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த கார் மோதியுள்ளது.

புகையிரதத்துடன் மோதிய கார் சில மீட்டர்கள் முன்னோக்கிச் சென்று பெங்கிரிவத்த புகையிரத நிலையத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் கார், இரண்டு தொலைபேசி கம்பங்கள் மற்றும் புகையிரதத்தின் மின் விளக்கு ஒன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு