யாழ்.வேலணையில் நண்பரின் ATM அட்டையை திருடி 30 ஆயிரத்திற்கு மதுபானம் வாங்கியவருக்கு பிணை!

ஆசிரியர் - Editor I
யாழ்.வேலணையில் நண்பரின் ATM அட்டையை திருடி 30 ஆயிரத்திற்கு மதுபானம் வாங்கியவருக்கு பிணை!

நண்பரின்  ATM அட்டையை திருடி மதுபானம் வாங்கிய நபர் 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் யாழ்.வேலணை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கின்றது. 

தனது நண்பனின் ATM அட்டையை திருடி 30 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்களை கொள்வனவு செய்துள்ளார்.

அது தொடர்பில் ATM அட்டையின் உரிமையாளரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் 

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து, நீதிமன்றில் இன்று (20) முற்படுத்தியபோது 

வழக்கினை விசாரணை செய்த நீதவான் சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல குறித்த நபருக்கு அனுமதித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு