448 போதை மாத்திரைகளுடன் அச்சுவேலியில் இருவர் கைது! கைதானவர்களில் ஒருவருக்கு திருட்டு சம்பவங்களுடனும் தொடர்பாம்..

ஆசிரியர் - Editor I
448 போதை மாத்திரைகளுடன் அச்சுவேலியில் இருவர் கைது! கைதானவர்களில் ஒருவருக்கு திருட்டு சம்பவங்களுடனும் தொடர்பாம்..

448 போதை மாத்திரைகளுடன் யாழ்.அச்சுவேலி - நவக்கிரி பகுதியில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

நவகிரி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயதான இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இ

வர்களில் 19 வயதான சந்தேகநபர் திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டவர் என பொலிஸார் கூறினர். 

சந்தேகநபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று(20) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, 

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு