சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யும் கூடாரமாக மாறியுள்ள யாழ்.கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள்! போதைப் பொருள் பாவனையும் தாராளம்..

ஆசிரியர் - Editor I
சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யும் கூடாரமாக மாறியுள்ள யாழ்.கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள்! போதைப் பொருள் பாவனையும் தாராளம்..

யாழ்ப்பாண நகரிலிருந்து தீவுப்பகுதிக்குச் செல்லும் பிரதானமார்க்கமான பண்ணைப் பாலத்தின் கீழ்ப் பகுதி மற்றும் கோட்டைக்கு வெளியேயுள்ளபகுதி என்பவற்றில் தொடர்ச்சியாக பல சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதாக யாழ்.மாவட்டச் செயலகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

துஷ்பிரயோகம். முனியப்பர் ஆலயத்துக்கு பின்பாகவும், கோட்டைக்கு வெளியேயும் உள்ள பகுதியிலேயே பாடசாலைச் சிறுமிகள் பலர் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். 

காதலர்கள் என்ற போர்வையில் அங்கு அழைத்து வரப்படும் சிறுமிகள் துஷ்பிரயோகத் துக்கு உள்ளாகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்தச் சம்பவங்கள் அங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அதேபோன்று பண்ணைப் பாலத்தின் கீழ்ப் பகுதியிலும் இதேபோன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப் படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் உன்னிப்பாக கவ னிக்கவேண்டும் என்றும், 

பொலிஸார் இந்தப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் மாவட்டச் செயலகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு