தமிழீழ விடுதலை புலிகளின் தங்கம் மற்றும் ஆயுதங்களை தேடி யாழ்ப்பாணத்தில் அகழ்வு!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் தங்கம் மற்றும் ஆயுதங்களை தேடி யாழ்ப்பாணத்தில் அகழ்வு!

தமிழீழ விடுதலை புலிகளினால் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக கருதப்படும் இடத்தை நீதிமன்ற அனுமதியுடன் அகழும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

யாழ்.இருபாலை டச்சு வீதியில் இந்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. யாழ்.நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் இந்த அகழ்வுப் பணி இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து 6 பேர் அகழ்வுப் பணிக்கு தயாராகிய நிலையில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களில் இராணுவத்தில் உள்ளவர்களும் அடங்கியிருந்தனர். இந்த நிலையில் கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் இன்று முற்பகல் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு