வடமாகாண மாணவர்களுக்கு காலாவதியான பைஸர் தடுப்பூசி! அதிர்ச்சி தகவல் வெளியானது, மற்றய மாகாணங்களில் நிராகரிக்கப்பட்டது வடமாகாணத்தில் நடைமுறை..

ஆசிரியர் - Editor I
வடமாகாண மாணவர்களுக்கு காலாவதியான பைஸர் தடுப்பூசி! அதிர்ச்சி தகவல் வெளியானது, மற்றய மாகாணங்களில் நிராகரிக்கப்பட்டது வடமாகாணத்தில் நடைமுறை..

வடமாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு காலாவதியான பைஸர் தடுப்பூசிகளே ஏற்றப்படு கின்றன என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. எனினும், சுகாதார அமைச்சின் தடுப்பூசி தொடர்பான ஆலோச னைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தற்போது வடமாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன. இதன்போது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்து டன் காலாவதியான தடுப்பூசிகளே மாணவர்களுக்கு ஏற்றப்படுகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால், காலாவதியான இந்தத் தடுப் பூசிகளை 2022ஆம் ஆண்டுடிசெம்பர் மாதம் வரையில் ஏற்றுவதற்கு அதிகாரி களால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட் டுள்ளன. அதற்கமைய கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இந்தத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 

அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு இந்தத் தடுப் பூசிகள் ஏற்றப்படவுள்ளன என்றும் தெரி யவருகின்றது. வடக்கின் ஏனைய பாட சாலை மாணவர்களுக்கும் இந்தத் தடுப்பூசிகளே ஏற்றப்படவுள்ளன. இது தொடர்பாக மாணவர்களுக்கோ, பெற் றோருக்கோ சுகாதாரத்துறையால் எந்த விளக்கமும் இதுவரை வழங்கப்பட வில்லை. 

இதுதொடர்பாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத் துவர் ஆ.கேதீஸ்வரனிடம் கேட்டபோது; 'இந்தத் தடுப்பூசியே நாடு முழுவதும் ஏற்றப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சின் தடுப்பூசி தொடர்பான ஆலோசனைக்குழுவின் பரிந்துரையுடனேயே காலாவதியான தடுப்பூசியை பயன்படுத்தும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. 

அதில் தடுப்பூசிகளை 2022 ஒக்ரோபர் 31 ஆம் திகதிவரை பாவனைக்குட்படுத்தலாம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 'காலாவதியாகி சில மாதங்கள் கடந்த பின்னரான தடுப்பூசிகள் செலுத்தப்படு வதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்ப டதா?' என்று அவரிடம் கேட்டபோது, 

'நாடு முழுவதும் இந்தத் தடுப்பூசியே செலுத்தப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விவரங்களை நீங்கள் சுகாதார அமைச்சிடம்தான் கேட்கவேண்டும்' என்று அவர் மழுப்பலாகப் பதிலளித்தார். அதேவேளை, ஏனைய மாகாணங் களில் சிலவற்றில் இந்தத்தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், அதிகாரிகளின் எதிர்ப்பால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது என்று அறியமுடிகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு