தியாகி திலீபனின் நினைவேந்தலும் மிச்சமில்லை! அரசியல் சாக்கடைகள் அங்கும் சண்டை..

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் நினைவேந்தலும் மிச்சமில்லை! அரசியல் சாக்கடைகள் அங்கும் சண்டை..

தியாகி திலீபனின் 35ம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள நினைவு துாபியில் இடம்பெற்றது. இதன்போது தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் வழக்கம்போல் மோதலில் ஈடுபட்டனர். 

முன்னாள் போராளிகளுடனும் முரண்பாட்டில் ஈடுபட்டதோடு தாங்களே இந்த நினைவேந்தல் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறே நிகழ்வு இடம்பெற வேண்டும் எனவும் கோரி முரண்பட்டனர்.

இதேவேளை கடந்த காலங்களில் நினைவேந்தல் நிகழ்வினை யாரும் நடத்த முடியாது என பொலிசார் நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு எடுத்தபோது சுமூகமாக நடந்த நினைவேந்தல்,இந்த ஆண்டு எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில் 

அரசியல் போட்டி காரணமாக சில தரப்புகள் தமக்குள் மோதிக் கொண்டுள்ளமையானது புனிதமான நினைவேந்தலை கொச்சைப்படுத்துவதாக அமையும் என தமிழ் உணர்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு