யாழ்.சுதுமலை பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு! கொழும்பை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுதுமலை பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு! கொழும்பை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் கைது..

அதிகாலை 2 மணியளவில் போதைப் பொருள் நுகர்ந்து கொண்டிருந்த 4 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 61 கிராம் போதைப் பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

மானிப்பாய் - சுதுமலை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கைது செய்யப்பட்டவர்களில் மூவர் யாழ்ப்பாணத்தையும் ஒருவர் கொழும்பையும் சேர்ந்தவரென தெரியவருகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் வியாபாரிகள் என சந்தேகம் வெளியிட்ட பொலிசார், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு