யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகைரதத்தில் மோதி குடும்பஸ்த்தர் பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகைரதத்தில் மோதி குடும்பஸ்த்தர் பலி!

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகைரதம் மீது மோதி உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் தாண்டிக்குளம் பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளது. 

அதிகாலை கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் பயணித்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதுண்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஈஸ்வரிபுரத்தை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மைக்கல் தினகரன் என்பவரே உயிரிழந்தவராவர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு