யாழ்.மாவட்டச் செயலகம் அருகில் பெண்ணின் கைப்பையுடன் நடமாடிய இளைஞன் கைது! 20 லட்சம் பெறுமதியான நகை, போதைப் பொருள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டச் செயலகம் அருகில் பெண்ணின் கைப்பையுடன் நடமாடிய இளைஞன் கைது! 20 லட்சம் பெறுமதியான நகை, போதைப் பொருள் மீட்பு..

யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அருகில் பெண்கள் பயன்படுத்தும் கைப் பையுடன் நடமாடிய நபரிடமிருந்து சுமார் 20 லட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் போதைப் பொருள் ஆகியன மீட்கப்பட்டுள்ளது. 

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பெண்கள் பயன்படுத்தும் கைப்பையுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் இளைஞன் ஒருவன் நடமாடியுள்ளார்.  

அது தொடர்பில் தகவல் அறிந்த யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று , குறித்த இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்து , அவரது உடமைகளை சோதனையிட்டனர். 

குறித்த இளைஞன் 24 வயதுடைய குருநகர் பகுதியை சேர்ந்தவர் என்றும், இளைஞன் வைத்திருந்த பெண்களின் கைப்பையினுள் சுமார் 08 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் 

மற்றும் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான தங்க நகை என்பன காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு