மரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து! இளைஞன் உயிரிழப்பு, யாழ்.பலாலி வீதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து! இளைஞன் உயிரிழப்பு, யாழ்.பலாலி வீதியில் சம்பவம்..

யாழ்.பலாலி வீதி - கந்தர்மடம் சந்தியை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கி.சரவணபவன் (வயது32) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, 

யாழ்ப்பாணத்தில் இருந்து திருநெல்வேலி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவரே கந்தர்மடம் பகுதி அருகே உள்ள மரத்துடன் மோதுண்டு மயக்கமுற்றார்.

உடனடியாகவே யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்தார்.

உயிரிழப்புக்கு அதிவேகமாக மோட்டார் வாகனத்தை செலுத்தியமையே காரணம் என சட்ட மருத்துவ அதிகாரி நமவசிவாயம் பிறேம்குமார் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு