ஆட்டோ சாரதிக்கு சோடாவில் மயக்க மருந்து கொடுத்து மோதிரம் திருட்டு! யாழ்.பருத்தித்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
ஆட்டோ சாரதிக்கு சோடாவில் மயக்க மருந்து கொடுத்து மோதிரம் திருட்டு! யாழ்.பருத்தித்துறையில் சம்பவம்..

ஆட்டோ சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து மோதிரத்தை களவாடிய சம்பவம் யாழ்.வடமராட்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும்  தெரியவருவதாவது, முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்த குறித்த நபர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வந்ததும் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறி மருத்துவமனைக்குள் சென்று சிறிது நேரத்தில் திரும்பியுள்ளனர்.

வரும்போது 3 மென்பான போத்தல்களை கொண்டுவந்த அந்த நபர்கள் முச்சக்கர வண்டி சாரதிக்கும் மென்பானத்தை அருந்துமாறு கொடுத்துள்ளனர்.

பின்னர் பருத்தித்துறை நோக்கி முச்சக்கர வண்டியை செலுத்துமாறு கூறியுள்ளனர். பருத்தித்துறை நோக்கி முச்சக்கர வண்டி சென்று கொண்டிருந்த போது மந்திகை, சிலையடி பகுதியில் முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு கூறி வாகனத்தில் வந்தவர்கள் இறங்கி சென்றுள்ளனர்.

இந்நிலையில்,வீதியில் முச்சக்கர வண்டி நீண்ட நேரம் நிற்பதை கண்ட பருத்தித்துறை பொலிஸார் அதன் அருகில் சென்று பார்த்த போது சாரதி மயங்கிக் கிடப்பதை அறிந்துள்ளனர்.

பின்னர் அவரை உடனடியாக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையின் போது சாரதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவர் மயங்கிய பின்னர் அவரின் மோதிரத்தை களவாடி சென்றமை தெரியவந்துள்ளது.

பருத்தித்துறை பொலிசார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு