பொலிஸ் சுற்றிவளைப்பில் கைக்குண்டுடன் மாட்டிய நபர், பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக வைத்திருந்தாராம்..!

ஆசிரியர் - Editor I
பொலிஸ் சுற்றிவளைப்பில் கைக்குண்டுடன் மாட்டிய நபர், பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக வைத்திருந்தாராம்..!

கிளிநொச்சி தருமபுரம் - உழவனூர் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை கைக் குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று காலை தருமபுரம் பொலிசாருக்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்தனர். 

இதன்போது அங்கிருந்த நபரை சோதனை செய்தபோது அந்த நபர் தனது உடமையில் கைக்குண்டு ஒன்றை மறைத்து வைத்திருந்தமை தொியவந்துள்ளது. 

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்த தருமபுரம் பொலிசார் அவரிடம் மேலதிக விசாரணைகளின்போது கைக்குண்டை நிலத்தில் கிடந்து எண்டு எடுத்ததாகவும் அதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கவே

உடமையில் வைத்திருந்ததாகவம் கூறியுள்ளார்.  இதேவேளை குறித்த சந்தேக நபரை உரிய சட்டநடவடிக்கைக்கு உட்படுத்த உள்ளதாகவும் தருமபுரம் பொலிஸ் நிலைய தகவல்கள் மேலுல் தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு