கடற்படை சுற்றிவளைப்பில் இருவர் கைது! கிளாலியில் இன்று அதிகாலை சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கடற்படை சுற்றிவளைப்பில் இருவர் கைது! கிளாலியில் இன்று அதிகாலை சம்பவம்..

பளை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட கிளாலி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 37கிலோ 700கிராம் கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் பளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 

பொலிசாரால் குறித்த சந்தேக நபர்களையும் கஞ்சா பொதிகளையும் நீதிமன்ற நடவடிக்கைக்கு முற்படுத்த நடவடிக்ககள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு