நண்பரின் வீட்டுக்கு சென்று கதிரையில் அமர்ந்த சில நொடிகளில் உயிரிழப்பு! யாழ்.திருநெல்வேலியில் நடந்த துயர சம்பவம்...

ஆசிரியர் - Editor I
நண்பரின் வீட்டுக்கு சென்று கதிரையில் அமர்ந்த சில நொடிகளில் உயிரிழப்பு! யாழ்.திருநெல்வேலியில் நடந்த துயர சம்பவம்...

நண்பருடைய வீட்டுக்கு செந்து கதிரையில் அமர்ந்தவர் அப்படியே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் கோப்பாய் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார். 

மேற்படி நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துள்ளார். 

உடனடியாக வீட்டார் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போதிலும் , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிக்கையிட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு