விடுதலை கோரி உச்ச நீதிமன்றில் நளினி மேல்முறையீடு!!

ஆசிரியர் - Editor II
விடுதலை கோரி உச்ச நீதிமன்றில் நளினி மேல்முறையீடு!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கைதாகி 30 வருடங்களுக்கு மேல் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தாயாரின் உடல்நிலை காரணமாக நளினிக்கு தமிழக அரசாங்கம் பிணை வழங்கியுள்ளது.

இதற்கிடையே ராஜீவ் கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி மேல் நீதிமன்றத்தில் அவர் மனு செய்தார். இதை விசாரித்த சென்னை மேல் நீதிமன்றம் 'பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என தெரிவித்தது.

சென்னை மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவுக்கு எதிராகவும், அதற்கு தடை கோரியும் நளினி சார்பில் வக்கீல்கள் ஆனந்த்செல்வம், ஆனந்த் திலீப் லங்க்டே ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் 30 வருடங்களுக்கு மேல் சிறையில் உள்ளேன். தனிமை சிறையில் அடைக்கப்பட்டு, கொடுமைகளையும், மன உளைச்சல், உடல் சுகவீனம் உள்ளிட்டவற்றையும் அனுபவித்துள்ளேன்.

வழக்கு நிலுவையில் இருக்கும்போது பேரறிவாளனை பிணையில் விடுவித்தது போல, தன்னையும் பிணையில் விடுவிக்க வேண்டும். அதன்பிறகு தனது மனுவை முழுவதுமாக விசாரித்து விடுதலை செய்ய வேண்டும். 

முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரைத்த தமிழக அரசின் பரிந்துரை பேரறிவாளனுக்கு மட்டும் பொருந்தாது. அனைவருக்கும் பொருந்தக்கூடியதே. எனவே அனைவருக்கும் விடுதலை பெறுவதற்கான உரிமை உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

இதே விவகாரம் தொடர்பாக ரவிச்சந்திரன் உந்ந நீதிமன்றத்தில் கடந்த மாதம் மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு