தனிப்பட்ட தகராறினால் மோதல்! ஒருவர் அடித்துக் கொலை, கொலை சந்தேகநபர் தலைமறைவு..

ஆசிரியர் - Editor I
தனிப்பட்ட தகராறினால் மோதல்! ஒருவர் அடித்துக் கொலை, கொலை சந்தேகநபர் தலைமறைவு..

தனிப்பட்ட தகராறினால் நடந்த மோதலில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கலஹபிடிய பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

மோதலில் படுகாயமடைந்த நபர் மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

58 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் மற்றும் சந்தேகநபருக்கு இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக 

இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் அடையளாம் காணப்பட்டுள்ளதுடன் 

அவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு