பிரதேச வைத்தியசாலை மருந்தகத்திற்குள் தீ விபத்து..! பெருமளவு மருந்துகள் எரிந்து நாசம்..

ஆசிரியர் - Editor I
பிரதேச வைத்தியசாலை மருந்தகத்திற்குள் தீ விபத்து..! பெருமளவு மருந்துகள் எரிந்து நாசம்..

பிரதேச வைத்தியசாலையின் மருந்தகத்தில் மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருந்த தீ விபத்தினால் பெருமளவு மருந்துப் பொருட்கள், தளபாடங்கள் எரிந்துள்ளன. 

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மருந்தகத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு, தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதன்போது, மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் உட்பட பொருட்கள், தளபாடங்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இன்றையதினம் மருத்துவசேவைகள் தடையின்றி சிறப்பாக மக்களுக்கான மருத்துவசேவை தடையின்றி நடைபெற்றுவருகிறது.

சம்பவம் தொடர்பில்,கிளிநொச்சி பொலிசாரும், தடயவியல் பிரிவினரும் மற்றும் பிராந்திய சுகாதார சேவையினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு