சிவாஜிலிங்கத்தை கைது செய்யுங்கள், வடமாகாணசபையை கலைத்து விடுங்கள்..

ஆசிரியர் - Editor I
சிவாஜிலிங்கத்தை கைது செய்யுங்கள், வடமாகாணசபையை கலைத்து விடுங்கள்..

வடமாகாணசபை நாட்டுக்கு ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளதாக கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, அரசியலமைப்புக்கு எதிராக பேசிய மாகாணசபை உறுப்பினர் சி வாஜிலிங்கத்தை கைது செய்யவேண்டும்.

மேற்கண்டவாறு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் கூற ப்பட்டிருப்பதாவது, வடமாகாணத்தில் தான்தோன்றிதனமான நிர்வாகம் நடைபெறுவதற்கு தேசிய அ ரசாங்கத்தின் பலவீனமே காரணமாகும். அத்துடன் வடமாகாணசபை நாட்டுக்கு ஆபதாக மறியுள்ளது.

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தாம் வடமாகாணசபையின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுவோம், நினைத்தால் தலைகீழாக கூட பறக்கவிடுவோம் என கூறியுள்ளார். அ வர் அரசியலமைப்புக்கு எதிராக பேசியிருக்கின்றார். அவரை கைது செய்யவேண்டும். 

மேலும் தேசிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வடமாகாணசபையை எவ்வளவு முடியுமோ அவ் வளவு வேகமாக கலைக்கவேண்டும் எனவும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளதாக சிங் கள ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு