அதிக விலைக்கு அரிசி விற்ற யாழ்.நகர வர்த்தகர்கள் இருவருக்கு தலா 1 லட்சம் அபராதம்!

ஆசிரியர் - Editor I
அதிக விலைக்கு அரிசி விற்ற யாழ்.நகர வர்த்தகர்கள் இருவருக்கு தலா 1 லட்சம் அபராதம்!

அரிசிக்கான நிர்ணய விலையை காட்டிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த யாழ்.நகர் வர்த்தகர்கள் இருவருக்கு தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அதிகாரசபையினர் நடத்தியிருந்த சுற்றிவளைப்பு தேடுதலின்போது நிர்ணய விலையை காட்டிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. 

இதனைடுத்து பாவையாளர் அதிகாரசபையினால் குறித்த வர்த்தக நிலையம் இரண்டின் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. குறித்த வழக்கு விசாரணையின்போது வர்த்தகர்கள் குற்றத்தை ஒப்பக் கொண்ட நிலையில், 

தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு