மானிப்பாய் சந்தியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து! 3 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
மானிப்பாய் சந்தியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து! 3 பேர் படுகாயம்..

யாழ்.மானிப்பாய் சந்தியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

படுகாயமடைந்தவர்களில் ஒருவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதென கூறப்படுகின்றது. 

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் இருந்தவர்களின் உதவி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு