வரலாற்று புகழ் மிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழா ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
வரலாற்று புகழ் மிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழா ஆரம்பம்..!

வரலாற்று புகழ்மிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 

இன்று காலை 9மணி முதல் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி, காலை 10 மணிக்கு அந்தண சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் இசைக்க தவில் நாதஸ்வரம் ஒலிக்க, 

பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் இடம்பெற்றது. தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவம் இடம்பெறவுள்ளதுடன் 

மஞ்சத்திருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது. எதிர்வரும் 18 ஆம் அருணகிரிநாதர் உற்சவமும், 

19ஆம் கார்த்திகை உற்சவமும் 24 ஆம் திகதி மாலை சப்பறத்திருவிழாவும், 25 ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 26 ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் இடம்பெற்று 

அன்றையதினம் மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு