பொதுமக்களை அச்சுறுத்தும் வகையல் வாள்களுடன் நடமாடியவர்களை மடக்கிய இளைஞர்கள்! இருவர் தப்பி ஓட்டம், ஒருவர் வாளுடன் சிக்கினார். யாழ்.சங்கரத்தை சந்தியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையல் வாள்களுடன் நடமாடியவர்களை மடக்கிய இளைஞர்கள்! இருவர் தப்பி ஓட்டம், ஒருவர் வாளுடன் சிக்கினார். யாழ்.சங்கரத்தை சந்தியில் சம்பவம்..

யாழ்.வட்டுக்கோட்டை - சங்கரத்தை சந்தியில் வாள்களுடன் நடமாடிய 3 நபர்களை அப்பகுதி இளைஞர்கள் மடக்கிய நிலையில் தப்பி ஓடுவதற்கு முயற்சித்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் இருவர் தப்பி ஓடியபோதும், ஒருவர் வாள்களுடன் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு 8.15 மணியளவில் சங்கரத்தை சந்தியில் இடம்பெற்றிருக்கின்றது. வட்டுக்கோட்டை பகுதியில் திருட்டு சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள், வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றது. இன்றிலையில் குறித்த 3 பேர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், 

வாள்களுடன் அப்பகுதியில் நடமாடியுள்ளனர். இதனை அவதானித்த இளைஞர்கள் குறித்த ரவுடிகளை வழிமறிக்க முயற்சித்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தபோது விபத்துக்குள்ளாகி விழுந்துள்ளனர். இதனையடுத்து இருவர் அங்கிருந்து தப்பி ஓடியபோதும் ஒருவர் வாளுடன் சிக்கிக் கொண்டார். 

அவரை மடக்கி பிடித்த இளைஞர்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், வாள் மற்றும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்ற்றி சென்றிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு