ஹெட்லைட் கூட இல்லாமல் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தள்ளிக் கொண்டுவந்த பழைய காருக்கு எரிபொருள்! அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில்...

ஆசிரியர் - Editor I
ஹெட்லைட் கூட இல்லாமல் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தள்ளிக் கொண்டுவந்த பழைய காருக்கு எரிபொருள்! அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில்...

யாழ்.அச்சுவேலி ப.நோ.கூ சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சிலரால் தள்ளிக் கொண்டுவரப்பட்ட பழைய காருக்கு எந்த கேள்வி ஞாயமும் இல்லாமல் எரிபொருள் வழங்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

சாதாரணமாக பொதுமக்களுடைய ஓடும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கே ஆயிரம் கேள்விகளை கேட்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தார் வீதியில் செலுத்துவதற்கு பொருத்தமற்றது என கருதக்கூடிய, 

மின் விளக்குகள் கூட இல்லாத இழுத்துவரப்பட்ட காருக்கு எப்படி எரிபொருள் வழங்கினார்கள்? என கேள்வி எழுப்பியிருக்கின்றனர். மேலும் இதே எரிபொருள் நிரப்பு நிலையத்தில் யாழ்.மாவட்டச் செயலரின் சிபாரிசு என கூறி 

சிலருக்கு அதிகளவான எரிபொருள் வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்வாறான சம்பவம் யாழ்ப்பாணத்திலுள்ள மேலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இடம்பெற்று வருகிறது. 

ஓட முடியாத மோட்டார் சைக்கிள்கள், வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது என பொதுமக்களிடமிருந்து குற்றஞ்சாட்டுகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு