யாழ்.பல்கலைகழகத்தில் கறுப்பு ஜீலை நினைவேந்தல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழகத்தில் கறுப்பு ஜீலை நினைவேந்தல்..

கறுப்பு ஜீலை நினைவு தினம் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் பல்கலைகழக வளாகத்திலுள்ள துாபியில் இடம்பெற்றது. 

இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டது. 

இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு ,மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும் 1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு