ஊசி மூலம் ஹெரோயின் போதைப் பொருளை செலுத்திய 20 வயது இளைஞன் அடுத்த சில நொடிகளில் மரணம்..! யாழ்.கொழும்புத்துறையில்..

ஆசிரியர் - Editor I
ஊசி மூலம் ஹெரோயின் போதைப் பொருளை செலுத்திய 20 வயது இளைஞன் அடுத்த சில நொடிகளில் மரணம்..! யாழ்.கொழும்புத்துறையில்..

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை ஊசி மூலமாக பயன்படுத்திய 20 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளான். 

குறித்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து ஹெரோயின் போதைப் பொருளை ஊசிமூலம் பயன்படுத்திய நிலையில்,

அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அங்கு சலப் பரிசோதனை செய்யப்பட்டபோது போதைப் பொருள் நேர்மறை அறிக்கை கிடைத்துள்ளது. நாளை உடற்கூற்று பரிசோதனை செய்யப்பட்டதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு