வீதியால் சென்றுகொண்டிருந்தவர்களை வழிமறித்து தாக்குதல்! இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
வீதியால் சென்றுகொண்டிருந்தவர்களை வழிமறித்து தாக்குதல்! இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.பொன்னாலையில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவர்களை வழிமறித்த கும்பல் அலவாங்கால் தாக்கியதில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

பொன்னாலையில் கடந்த சனிக்கிழமை (16) இரவு இச்சம்பவம் இடம்பெற்றது. இதில் பொன்னாலையைச் சேர்ந்த ச.இலங்கேஸ்வரன் (வயது-42), ப.செல்வக்குமார் (வயது-33) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். 

சம்பவ தினம் இரவு 9.30 மணியளவில் மேற்படி இளைஞர்கள் இருவரும் நிகழ்ச்சி ஒன்றைப் பார்வையிடுவதற்காக சென்றுகொண்டிருந்தபோது பொன்னாலை பிள்ளையார் ஆலயத்திற்கு சமீபமாக நின்ற குழுவில் ஒருவரே இவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

தாக்குதல் நடத்திய நபர் பொன்னாலையைச் சேர்ந்தவர் எனவும் அவர் வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பியவர் எனவும் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு