யாழ்.பண்டத்தரிப்பில் வீடு புகுந்து முகமூடி கொள்ளை கும்பல் கத்திமுனையில் கொள்ளை..! 20 மற்றும் 21 வயதான இருவரை மடக்கியது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்டத்தரிப்பில் வீடு புகுந்து முகமூடி கொள்ளை கும்பல் கத்திமுனையில் கொள்ளை..! 20 மற்றும் 21 வயதான இருவரை மடக்கியது பொலிஸ்..

யாழ்.பண்டத்தரிப்பு பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து வீட்டிலிருந்தவர்களை கத்தி முனையில் அச்சுறுத்தி 20 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று (17) அதிகாலை முகமூடி கொள்ளையன் உட்புகுந்து , வீட்டின் கதவை திறந்து விட மேலும் நான்கு முகமூடி கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்து 

வீட்டாரை கத்தி முனையில் மிரட்டி அவர்களிடம் இருந்து 20 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , 

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டார் கொடுத்த முகமூடி கொள்ளையர்களின் அங்க அடையாளங்களின் அடிப்படையில் 20 , 21 வயதான இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு