யாழ்.மாவட்டச் செயலகம் அருகில் உள்ள வீடொன்றில் நுழைந்து பெற்றோல் திருட்டு! மக்களே அவதானம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டச் செயலகம் அருகில் உள்ள வீடொன்றில் நுழைந்து பெற்றோல் திருட்டு! மக்களே அவதானம்...

யாழ்.மாவட்டச் செயலகத்தின் அருகில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலில் இருந்து பெற்றோலை திருடிச் சென்றிருக்கின்றது. 

இதனை அறியாத வீட்டார் காலையில் எழுந்து வெளியே செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுத்தபோது மோட்டார் சைக்கிள் இயங்காமையால் சுதாகாரித்த அவர்கள் பின்னர் ஆராய்ந்தபோது எரிபொருள் திருடப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த துணிகர திருட்டு சம்பவம் வீட்டிலிருந்த சீ.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. அதனை வீட்டு உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு