தேசிய அளவிலான எரிபொருள் பாஸ் நடைமுறைக்கு வந்தாலும் யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் அட்டை நடைமுறையில் இருக்குமாம்..!

ஆசிரியர் - Editor I
தேசிய அளவிலான எரிபொருள் பாஸ் நடைமுறைக்கு வந்தாலும் யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் அட்டை நடைமுறையில் இருக்குமாம்..!

தேசிய அளவில் எரிபொருளுக்கு புதிய பாஸ் நடைமுறை அமுல்ப்படவுள்ள நிலையில் அது நடைமுறைக்கு வந்தாலும் யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் அட்டை நடைமுறையில் இருக்கும் என யாழ்.மாவட்டச் செயலர் கூறியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, எரிபொருள் விநியோக ஒழுங்கு முறை தொடர்பில் தேசிய ரீதியிலான வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட முன்னரே எரிபொருள் அட்டை விநியோகத்தை நாம் ஆரம்பித்துவிட்டோம் . 

இப்போது தேசிய ரீதியான வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அதனை நாம் புறக்கணிக்க முடியாது. ஆனாலும், யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் அட்டை தொடர்ந்தும் வழங்கப்பட்டு, 

அதன் ஊடாக விநியோக ஒழுங்கு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு