யாழ்.நெல்லியடியில் திருவிழாவுக்கு சென்ற மக்களை மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடிய டிப்பர், 7 பேர் காயம், பொலிஸார் துரத்தி சென்றதால்...

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடியில் திருவிழாவுக்கு சென்ற மக்களை மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடிய டிப்பர், 7 பேர் காயம், பொலிஸார் துரத்தி சென்றதால்...

யாழ்.நெல்லியடி - மாலுசந்தி பகுதியில் கோவில் திருவிழாவுக்காக கூடியிருந்தவர்கள் மீது டிப்பர் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

மணல் கடத்தல் சம்பவத்துடன் தொடர்படைய சந்தேகத்தில் பொலிஸார் வழிமறித்த டிப்பர் வாகனம் பருத்தித்துறை - யாழ்ப்பாணம் வீதி வழியாக தப்பி ஓடியுள்ளது. இதன்போது பொலிஸார் துரத்திச் சென்றிருந்த நிலையில் நெல்லியடி மாலுசந்தி பிள்ளையார் கோவிலில் 

சப்பற திருவிழாவுக்கு கூடியிருந்த மக்கள் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றது. சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர், இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு