யாழ்.திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்திற்கு எரிவாயு விநியோகம் சீரானது..! 3 மாதங்கள் எரிவாயு இல்லை, பொறுப்புவாய்ந்த அதிகாரிகள்????

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்திற்கு எரிவாயு விநியோகம் சீரானது..! 3 மாதங்கள் எரிவாயு இல்லை, பொறுப்புவாய்ந்த அதிகாரிகள்????

யாழ்.திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்திற்கு தொடர்ந்து சமையல் எரிவாயு வழங்க லிட்ரோ நிறுவனத்தின் யாழ்.மாவட்டத்திற்கான விநியோகஸ்த்தர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அம்மாச்சி உணவகத்துக்கு எரிவாயு வழங்காத காரணத்தினால் குறித்த உணவகத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

குறித்த உணவகத்தில் தினந்தோறும் காலை பல்கலைக்கழக மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் தமது காலை உணவை குறித்த உணவகத்தில் பெற்று வந்தனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட லிற்றோ எரிவாயு சிலிண்டர்கள் ஹோட்டல்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட நிலையில் குறித்த உணவகத்துக்கு விநியோகம் செய்யப்படவில்லை.

இது குறித்து மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் ஆகியனவும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டிருந்தமை தொடர்பிலும் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. 

இவ்வாறான நிலையில் இது விடயமாக சமையல் எரிவாயு விநியோகஸ்த்தர்களை தொடர்பு கொண்டபோது அம்மாச்சி உணவகத்திற்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும்.

தாம் தொடர்ச்சியாக வழங்குகின்ற ஹோட்டல் வகைகளுக்குள் அம்மாச்சி உணவகமும் உள்ளீர்க்கப்பட்டு தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு