பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 20 வயதான சந்தேகநபர் யாழ்.பொன்னாலையில் கைது!

ஆசிரியர் - Editor I
பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 20 வயதான சந்தேகநபர் யாழ்.பொன்னாலையில் கைது!

யாழ்.பொன்னாலை பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து நீர் இறைக்கும் மோட்டார்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 

கைப்பற்றப்ட்ட நீர் இறைக்கும் மோட்டார்களில் ஒன்றை அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் ஆதாரங்களை காட்டி பெற்றுள்ளார். 

மேலும் கைது செய்யப்பட்ட நபர் வட்டுக்கோட்டையில் இரு வர்த்தக நிலையங்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர் என கூறப்படுகின்றது. 

குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு