யாழ்.நகரில் இடம்பெற்ற தொடர் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை மடக்கியது பொலிஸ்!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் இடம்பெற்ற தொடர் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை மடக்கியது பொலிஸ்!

யாழ்.நகர் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடி விற்பனை செய்துவந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 18 துவிச்சக்கர வண்டிகள் முழுமையாகவும், உதிரிப்பாகங்களாகவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 

நாவற்குழியை சேர்ந்த குறித்த நபர் துவிச்சக்கர வண்டிகளை திருடி அவற்றை முழுமையாகவும், உதிரிப்பாகங்களாக பிரித்தும் விற்பனை செய்துவந்தமை கண்டறியப்பட்டுள்ளது. 

சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் உள்ளது. துவிச்சக்கர வண்டிகளை பறிகொடுத்தவர்கள் அடையாளம் காட்டுமாக பொலிஸார் கேட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு