யாழ்.சங்கானையில் பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.சங்கானையில் பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!

யாழ்.சங்கானை பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த பெண் நரம்புத்தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் என்றும் "நான் உங்களுக்கு தொந்தரவாக இருப்பதற்கு விரும்பவில்லை" என்றும் 

உறவினர்களுக்கு கூறியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலமானது யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

சங்கானை பகுதியைச் சேர்ந்த கந்தையா அன்னம்மா (வயது 81) என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு