யாழ்.நகரில் சைக்கிள் திருடியவர் கைது..! 6 சைக்கிள்கள் மீட்பு, பறிகொடுத்தவர்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் சைக்கிள் திருடியவர் கைது..! 6 சைக்கிள்கள் மீட்பு, பறிகொடுத்தவர்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு..

யாழ்.நகரில் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் சைக்கிள் திருடன் ஒருவன் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளான். 

கைது செய்யப்பட்ட திருடனிடமிருந்து பொலிஸார் 6 துவிச்சக்கர வண்டிகளை மீட்டிருக்கின்றனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. 

இது குறித்து பொலிஸார் கூறியுள்ளதாவது, 

கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஆறு சைக்கிள்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. மீட்கப்பட்ட சைக்கிள்களின் இலக்கங்களை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்தபோது அவை தொடர்பாக முறைப்பாடுகள் இல்லை. 

எனவே யாழ்.நகரில் சைக்கி்களை பறி கொடுத்தவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு தங்களுடைய சைக்கிள்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். 

மேலும் நேற்று மதியம் யாழ்.நகரப் பகுதியில் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை தொடர்பில் திருடப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த கடை ஒன்றின் சிசிடி கமராவின் உதவியுடன் சைக்கிள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. 

அதனடிப்படையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய திருடன் கைது செய்யப்பட்டு 6 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு