சுமார் 3600 லீற்றர் மண்ணெண்ணெய் பதுக்கிவைத்திருந்த நிலையில் மீட்பு..! நிறம் வித்தியாசப்படுவதாக பொலிஸார் சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
சுமார் 3600 லீற்றர் மண்ணெண்ணெய் பதுக்கிவைத்திருந்த நிலையில் மீட்பு..! நிறம் வித்தியாசப்படுவதாக பொலிஸார் சந்தேகம்..

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டதாக நம்பப்படும் சுமார் 3600 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை பதுக்கிவைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று புதன் கிழமை மாலை கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கொள்கலன்களில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய 55 வயதான இஸ்லாமியர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், 3600 லீட்டர் மண்ணெண்ணையும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மண்ணெண்ணை வெள்ளை நிறமானது எனவும், இலங்கையில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணையிலிருந்து வேறுபட்டு காணப்படுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மண்ணெண்ணெய் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு