திருடிய துவிச்சக்கர வண்டியை இணையதளம் ஊடாக விற்க முயற்சி! பொறிவைத்து பிடித்த துவிச்சக்கர வண்டி உரிமையாளர்...

ஆசிரியர் - Editor I
திருடிய துவிச்சக்கர வண்டியை இணையதளம் ஊடாக விற்க முயற்சி! பொறிவைத்து பிடித்த துவிச்சக்கர வண்டி உரிமையாளர்...

திருடப்பட்ட துவிச்சக்கர வண்டியை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞன் யாழ்.சங்கானையில் நேற்று கைது செய்யப்பட்டிருப்பதுடன், சைக்கிளும் மீட்கப்பட்டிருக்கின்றது. 

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பாக மூளாய் வேரம் அக்கினி பைரவர் ஆலயத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இதனை பார்வையிடச் சென்ற பொன்னாலை தெற்கைச் சேர்ந்த இராசையா துஜீபன் என்பவரின் துவிச்சக்கரவண்டி திருடப்பட்டது. இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், குறித்த துவிச்சக்கரவண்டியை விற்பனை செய்வதற்காக சமூக வலைத்தளத்தில் (இக்மன்) விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதை பார்வையிட்ட வாகன உரிமையாளர் 

குறித்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அதை வாங்குவதுபோன்று விலைகளையும் தீர்மானித்து அவர்களுடன் உரையாடியதை தொடர்ந்து இன்று காலை சங்கானைக்கு வருமாறு அவர்கள் கூறியிருந்தனர். 

வாகன உரிமையாளரும் இன்னும் அவரது உறவினர்களும் சங்கானையில் சென்று காத்திருந்தனர். அவர்களுடன் பிரதேசசபை உறுப்பினர் ந.பொன்ராசாவும் சென்றிருந்தார். 

முற்பகல் 11.20 மணியளவில் துவிச்சக்கரவண்டியை இருவர் கொண்டுவந்துள்ளனர். இதன்போது காத்திருந்த துவிச்சக்கர வண்டி உரிமையாளர் உள்ளிட்டோர் அவர்களை தடுத்து நிறுத்தியதுடன், 

அவர்களிடமிருந்த துவிச்சக்கர வண்டியையும் பறித்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரித்ததில்  தாம் அராலியை சேர்ந்தவர்கள் எனவும் மூளாய் அக்கினி பைரவர் ஆலய இசை நிகழ்ச்சியின்போது 

இரவு 1.30 மணியளவில் ஒருவர் குறித்த துவிச்சக்கரவண்டியை 8000 ரூபாவுக்கு தமக்கு விற்பனை செய்தார் எனவும் அவர் யார் என தமக்கு தெரியாது எனவும் கூறினர். 

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் துவிச்சக்கரவண்டியை வாங்கியதாக கூறிய நபரை கைது செய்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு