பொதுமக்களுக்கே அதிகளவு எரிபொருளை வழங்குவோம்..! யாழ்.பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தார் விடாப்பிடி, திணறும் அதிகாரிகள்...

ஆசிரியர் - Editor I
பொதுமக்களுக்கே அதிகளவு எரிபொருளை வழங்குவோம்..! யாழ்.பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தார் விடாப்பிடி, திணறும் அதிகாரிகள்...

யாழ்.மாவட்டத்தின் எரிபொருள் விநியோக நடைமுறைகள் தொடர்பாக மாவட்டச் செயலத்தில் நேற்றயதினம் மாலையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. 

மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.

இதன்போது நீண்ட நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு எவ்வாறு எரிபொருட்களை விநியோகிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், 

இனிவரும் காலங்களில் வரும் எரிபொருளை எவ்வாறு விநியோகிப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது பொதுமக்களுக்கு 72 விதமான எரிபொருட்கள் விநியோகிப்பதாகவும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு 28 விதமான எரிபொருள்களை விநியோகிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு