மக்களுக்கு இயன்றவு எரிபொருளை முறையாக பகிர்ந்தளிக்க இராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது! யாழ்.ஆயருக்கு இராணுவம் தெரிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மக்களுக்கு இயன்றவு எரிபொருளை முறையாக பகிர்ந்தளிக்க இராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது! யாழ்.ஆயருக்கு இராணுவம் தெரிவிப்பு..

யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் - யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஐய சுந்தர ஜால்மரை இடையில் இன்றைய ஆயர் இல்லத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ்.ஆயர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது,

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக  மக்கள் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள். ஆகவே  இயன்றளவு அரசு அதிபரோடு இணைந்து அவரின் கீழ் எரிபொருளை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்புக்குரிய ஒழுங்கமைப்பினை மேற்கொண்டுள்ளோம். என யாழ் கட்டளை தளபதி தன்னிடம் தெரிவித்ததாகவும்,

வடபகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி எதுவும்  எமக்கு கிடைக்கவில்லை இருந்தும் வறிய குடும்பங்களுக்கான உதவிகள் செய்து கொண்டிருக்கின்றோம்.

அத்தோடு எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. கொழும்பு மற்றும் தூர இடங்களுக்கு போய் வருவது கஷ்டமாகவுள்ளது.

முக்கியமாக சுகாதார பிரிவினருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பினையும் கொடுத்து தயாராக இருக்கின்றோம். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுடைய பணியினை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு இராணுவம்  ஒத்துழைப்பினை வழங்கும் என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி தன்னிடம் தெரிவித்ததாக யாழ்.ஆயர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு