சுமார் 6800 லீற்றர் எரிபொருளை பதுக்கிவைத்திருந்தவர் சிக்கினார்..! வடமாகாணத்தில்...

ஆசிரியர் - Editor I
சுமார் 6800 லீற்றர் எரிபொருளை பதுக்கிவைத்திருந்தவர் சிக்கினார்..! வடமாகாணத்தில்...

கிளிநொச்சி - கரடிப்போக்கு பகுதியில் சுமார் 34 கொள்கலன்களில் எரிபொருள் பதுக்கிவைத்திருந்த நபர் ஒருவர் நேற்றய தினம் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

இதன்போது, குறித்த காணியிலிருந்து 33 கொள்கலனில் டீசலும், 1 கொள்கலனில் பெற்றோலும், மற்றுமொரு கொள்கலனில் 25 லீட்டர் மண்ணெண்ணையும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதன் படி ஏறத்தாழ 6800 லீட்டர் டீசலும், 200 லீட்டர் பெற்றோலும் சட்டத்திற்கு முரணாக உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாகவும், சான்றுப் பொருட்களும் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

கிளிநொச்சி மாவட்டத்தில் டீசல் லீட்டர் ஒன்று 1700 ரூபாவிற்கும், பெற்றோல் வீட்டர் ஒன்று 3000 ரூபாவிற்கும், மண்ணெண்ணை லீட்டர் ஒன்று 1500 ரூபாவிற்கும் கறுப்பு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்து.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு