யாழ்ப்பாணத்தில் 291 லீற்றர் டீசலுடன் மாட்டிய பதுக்கல் வியாபாரி..! பொறிவைத்து பிடித்த பொலிஸார்...

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் 291 லீற்றர் டீசலுடன் மாட்டிய பதுக்கல் வியாபாரி..! பொறிவைத்து பிடித்த பொலிஸார்...

யாழ்.அளவெட்டி பகுதியில் சுமார் 291 லீற்றர் டீசலை பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

அளவெட்டி பகுதியில் உள்ள கடை ஒன்றில் டீசலை பதுக்கி விற்பனை செய்வதாக பொலிசாருக்கு புலனாய்வு தகவல் கசிந்துள்ளது.

இதனடிப்படையில் பொலிசார் அதிரடி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதன்போது 291 லீற்றர் டீசல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பன பொலிசாரால் கைப்பற்றப்பட்டதோடு 

டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய கடை உரிமையாளரையும் பொலிசார் கைது செய்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு