குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 19 வயதான இளைஞன்..!

ஆசிரியர் - Editor I
குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 19 வயதான இளைஞன்..!

குளத்தில் நீராட சென்றிருந்த 19 வயதான இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று மாலை கிளிநொச்சி - அம்பாள்குளத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 

மாங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் ஊற்றுப்புலம் பகுதியில் தங்கியிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு