யாழ்.மாவட்ட மக்களே உஷார்..! மோட்டார் சைக்கிள்களில் எரிபொருள் திருடும் கும்பல், மாநகரசபை உறுப்பினர் உட்பட இரு பெண்களிடம் திருட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களே உஷார்..! மோட்டார் சைக்கிள்களில் எரிபொருள் திருடும் கும்பல், மாநகரசபை உறுப்பினர் உட்பட இரு பெண்களிடம் திருட்டு..

யாழ்.மாநகரசபையின் பெண் உறுப்பினர் உட்பட இரு பெண்களின் மோட்டார் சைக்கிள்களில் இருந்து பெற்றோல் திருடப்பட்டிருக்கின்றது. 

யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற செயலமர்வில் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிழமை குறித்த இருவரும் பங்கேற்றுள்ளனர். 

இதன்போது அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களில் இருந்து பெற்றோல் திருடப்பட்டிருக்கின்றது. 

இந்த விடயம் தொடர்பாக குறித்த இரு பெண்களும் விடுதி முகாமையாளருக்கு முறைப்பாடு கொடுத்திருக்கின்றனர். 

இதனடிப்படையில் மறைகாணிகள் உதவியுடன் விசாரிக்கப்டும் என விடுதி முகாமையாளர் கூறியிருக்கின்றார். 

யாழ்.மாவட்டத்தில் இவ்வாறான சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்திருக்கின்றது. 

பொதுச் சந்தைகள், கோவில்கள் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும்போது தமது மோட்டார் சைக்கிள்களை அவதானித்திருப்பது நல்லது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு