யாழ்ப்பாணம் - தமிழகம் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க இது ஒன்றே முட்டுக்கட்டை..! கப்பல் உள்ளிட்ட மற்றய அனைத்தும் தயார் என்கிறார் அமைச்சர்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - தமிழகம் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க இது ஒன்றே முட்டுக்கட்டை..! கப்பல் உள்ளிட்ட மற்றய அனைத்தும் தயார் என்கிறார் அமைச்சர்..

இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விடயத்தில் மட்டுமே தற்போது சிக்கல்கள் உள்ளது. என கூறியிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, படகுகள் உள்ளிட்ட மற்றய அனைத்து விடயங்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார். 

கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை நாட்டில் நிலவுவதால், அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பது என்ற தீர்மானம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. வரயிருக்கும் 10ம் திகதிக்கு பின்னர் வழமைக்கு திரும்பிவிடும் எனும் அடிப்படையல்தான் அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. 

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நான் கூறிவருவதுபோன்று இந்தியாவிலிருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதன் ஊடாக வடமாகாணம் அதற்கு மேலாக வடமத்திய மாகாணம் நன்மையை பெறும். அது விரைவில் நடைபெறும் என நம்புகிறேன். 

இந்தியாவிலிருந்து பொருட்களை ஏற்றி வருவது தொடர்பில் அமைச்சரவையில் ஆதரவு கிடைத்துள்ளதா என ஊடகவியலாளர் வினவினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் அதில் எவ்விதமான தடையும் இல்லை. கடைசியாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை என்று கூறப்பட்டது. 

அதுவும் பெறப்பட்டுள்ளது. ஆனால், நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே இழுபறி நிலை காணப்படுகின்றது. அதனை சீர்செய்வோமாக இருந்தால் எந்த நேரத்திலும் சரிவரும். அதற்காக படகுகள் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு