தேன்நிலவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்!! -போதும் நிறுத்துங்கப்பா... ரசிகர்கள் ஆதங்கம்-

ஆசிரியர் - Editor II
தேன்நிலவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்!! -போதும் நிறுத்துங்கப்பா... ரசிகர்கள் ஆதங்கம்-

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகையான லேடி சூப்பஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தற்போது தாய்லந்து நாட்டில் தங்களது தேன்நிலவு கொண்டாடி வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன் தங்களது தேன்நிலவு புகைப்படங்கள் சிலவற்றை தொடர்ந்து வெளியிடுகிறார். காதலிக்கும் போதுதான் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டீர்களே, திருமணம் ஆகிவிட்ட பின்னும் மீண்டும் இப்படி புகைப்படங்களை வெளியிடலாமா, 90ஸ் கிட்ஸ்களை வெறுப்பேற்றலாமா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் பொங்கி வருகிறார்கள்.

மேலும், தேன்நிலவுக்குச் செல்வதென்றால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவர் மட்டும்தானே சென்றிருப்பார்கள். அப்படியிருக்க தங்களது நெருக்கமான புகைப்படங்களை யாரை வைத்து எடுக்க வைத்திருப்பார்கள் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு