யாழ்.காங்கேசன்துறையில் பயங்கரம்..! வயோதிப பெண் கழுத்தறுத்துக் கொலை..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறையில் பயங்கரம்..! வயோதிப பெண் கழுத்தறுத்துக் கொலை..

யாழ்.காங்கேசன்துறை - கொல்லங்கலட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வாழ்ந்துவந்த வயோதிப பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்ட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மூதாட்டி அணிந்திருந்த நகைகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று காலை மூதாட்டியின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்துக்கு தண்ணீர் இறைப்பதற்கு சென்ற உறவினர் ஒருவர் மூதாட்டி குருதிக் காயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அறிந்து 

காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு