யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் ஜீலை - 1ம் திகதி மீள ஆரம்பம்..! புலம்பெயர் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் ஜீலை - 1ம் திகதி மீள ஆரம்பம்..! புலம்பெயர் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் ஜீலை 1ம் திகதி மீள ஆரம்பிக்கும் என விமான சேவைகள் அமைச்சர் அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா கூறியுள்ளார்.

சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்பதாகவும்,

அத்தோடு புலம்பெயர் தமிழர்கள் தமது தாயக நிலத்துக்கு நேரடியாக விமானமூடாக வருகைதர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை பார்வையிட்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு